கோவை திமுக மாநாடு: பயணிகள் அவதி
திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர், மேட்டுப்பாளையம், அன்னூர், கருமத்தம்பட்டி, கருவலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் பொதுமக்கள் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள் பெரும்பாலும் இந்த சேவைகளை நம்பியே உள்ளனர். இந்நிலையில் கோவையில் நடைபெற்ற திமுக மாநாட்டிற்கு பொதுமக்களை அழைத்துச் செல்ல திருப்பூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான தனியார் பேருந்துகள்
