அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு ஆசிரியர்கள் இல்லை — திமுக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் கண்டனம்
“தமிழரும் தொழில்நுட்பமும்” பாடம் கற்பிக்க பேராசிரியர்கள் நியமனம் அவசியம்; மாணவர்கள் படிக்காமலே தேர்வு எழுதும் நிலை என குற்றச்சாட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் முதலாமாண்டு பொறியியல் படிப்பில் இடம்பெற்றுள்ள “தமிழரும் தொழில்நுட்பமும்” என்ற பாடத்தைக் கற்பிப்பதற்கு உதவிப் பேராசிரியர்கள் ஒருவர் கூட இல்லை என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் இல்லாத சூழலில், தற்போது நடைபெற்று வரும் அகமதிப்பெண் தேர்வுகளில் மாணவர்கள் பாடத்தை முறையாக கற்காமலேயே
