ஓ.பி.எஸ். தி.மு.க.வுக்கு சென்றால் த.வெ.க.வுக்கு செல்வோம் – ஆதரவாளர்கள் திடீர் போர்க்கொடி
காஞ்சிபுரம் நிர்வாகிகள் உட்பட 75 பேர் விலகல்; நீலகிரியில் ஆதரவாளர்கள் கடும் எச்சரிக்கை தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. முக்கிய கட்சிகள் கூட்டணி அமைப்பு, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை வழிநடத்தி வரும்
