நடிகர் பாக்யராஜ் செய்த துரோகம்
கசப்பான அனுபவத்தை பகிர்ந்த இயக்குநர் சுந்தர்ராஜன் இயக்குநரும் நடிகருமான சுந்தர்ராஜன், தன் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சந்தித்த கசப்பான அனுபவங்களை சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். பல வெற்றிப் படங்களை இயக்கியதுடன், நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தனது நண்பரும் நடிகர்-இயக்குநருமான பாக்யராஜுடன் ஏற்பட்ட மனவருத்தத்தை வெளிப்படுத்தினார். சுந்தர்ராஜன் கூறுகையில், தானும் பாக்யராஜும் கோவையில் உள்ள பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒரே பள்ளியில் படித்த நண்பர்கள் என்றும் தெரிவித்தார். சினிமாவுக்கான ஆர்வம் காரணமாக
